Sunday, January 29, 2012

திருநங்கைத்தவளைகள்
சின்சினாட்டி பல்கலை கழக ஆராய்ச்சியாளர்கள் அற்றாஜின் என்ற பூச்சி மருந்துகளின் தாக்கத்தினால் ஆண் தலைகள் பெண் தவளைகளாக மாறுவதாக கண்டுபிடித்திருக்கிறார்கள். அப்படி மாறிய தவளைகள் சாதாரண ஆண் தவளைகளோடு கலவி செய்து வீரியமுள்ள முட்டைகள் இடுகின்றன. ஆனால் ஆண் தவளைகள் அதனுடைய ஆண் தன்மையை இழந்து விடுவதாகவும், சுரப்பிகளின் அளவு குறைந்து விடுவதாகவும் இறுதியில் அர்த்தனாரித்தவளைகள் ஆகின்றன. மீன்களில் ஆராய்ச்சி செய்து பார்த்ததில், விந்துகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. ஓனான் போன்ற ஊர்வனவற்றில் ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அதே போன்ற முடிவுகளே கிடைத்திருக்கிறது. சற்று யோசித்துப்பாருங்கள்!
தொடர்ச்சியாக நாமும் பூச்சி மருந்துகளின் தாக்கத்திற்க்குள்ளாகும்போது, நம்மில் என்னென்ன மாற்றங்கள் நிகழலாம். திருநங்கைகளுக்கும், ஆண்களுக்கும் அல்லது பெண்களுக்கான மரபணுக்களில் பெரிய மாற்றமெல்லாம் இல்லை. AR gene என்றழைக்கப்படும் ஆன்றோகேன் ரிசப்டோர் ஜீன் தான் காரணம் என்கிறார்கள். குரோமோசோம்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை ஆனால் மரபணுக்களில் தான் சில மாற்றங்கள். இன்று தவலையில் ஏற்பட்டிருக்கிற மாற்றங்கள் மனித குலத்திற்கும் நிகழலாம். சற்றே யோசிப்போம்!

No comments:

Post a Comment