Tuesday, August 30, 2011

பூச்சிகள்

இப்புவி பசுமையை இருப்பதற்கும், தாவரங்கள் பூத்துக் குழுங்கி, காய்களையும், கனிகளையும் நமக்கு கொடையாய் கொடுப்பது என எல்லாமுமாய் நமக்குத்தருவது பூச்சிகள் என்றால் நாம் நம்பித்தான் ஆகவேண்டும். அயல் மகரந்தச்சேர்க்கை மூலம் தாவரங்கள் இனவிருத்தி செய்ய உதவுவது பூச்சிகளே. இப்படி இப்புவியில் பூச்சிகளின் பங்கு மெச்சத்தக்கது. ஆனாலும், பூச்சிகளில் நன்மை செய்வன போல் தீமை செய்யும் பூச்சிகளும் உண்டு. பயிர்களை நாசம் செய்வதிலிருந்து, நோய் பரப்பும் கிருமிகளை பரப்புவது வரை அனைத்து மோசமான செயல்களை செய்வதும் பூச்சிகளே.

பூச்சிகள் எண்ணற்றவை. இப்புவியின் எண்ணற்ற உயிரினங்கள் பூச்சியினங்களே. பூச்சிகள் இல்லாத உலகத்தை நம்மால் கற்பனை செய்யக்கூட முடியாது. பூச்சிகள் கணுக்காலிகள் என்ற தொகுதியை சார்ந்தது. ஆறு கால்கள் உள்ளவையெல்லாம் பூச்சிகளே. உண்மையில் எட்டுக்கால் பூச்சிகள் பூச்சிகளே அல்ல. உலகின் உயிரினங்களில் ஐந்தில் ஒரு பங்கு பூச்சியினங்களே. அவற்றில் பல்லாயிரக்கணக்கான பூச்சியினங்கள் உண்டு. இன்னும் கண்டுபிடிக்காத பூச்சியினங்கள் கண்டுபிடித்தவைகளைவிட ஒரு மடங்கு அதிகமே. பூச்சிகள் அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும். சாக்கடையில் ஆரம்பித்து நல்ல தண்ணீர் வரையிலும், பனிப்பகுதியிளிருந்து வெப்பப்பகுதி வரையிலும் குகைகள், மலைகள், பள்ளத்தாக்குகள், ஓடைகள், நதிகள், புல்வெளிகள், காடுகள், பாலைவனங்கள், வயல்வெளிகள் என பார்க்கும் ஒவ்வொரு இடத்திலும் பூச்சிகள் நீக்கமற நிறைந்திருக்கும். இப்படிப்பட்ட பூச்சிகளின் வகைகள் பற்றி அறியலாம்.


எறும்பு (மாதிரி) இன்னும் சேர்க்க வேண்டியதிருக்கிறது

எறும்புகள் தனித்து வாழ்வதில்லை. ஒவ்வொரு எறும்பும் தனக்கிட்ட வேலையை செய்து முடிக்கும் திறன் கொண்டது. பெரும்பாலான எறும்புகள் பெண் வேலைக்கார எறும்புகளே. பெரிய குழிகளையும், எறும்புப்புற்றினையும் கட்டும் வல்லமை மிக்கவை அதோடு உணவு சேகரிப்பு, இளம் எறும்புகளுக்கு உணவு ஊட்டுவது, தனது கூட்டினை பாதுகாப்பது என பலவிதமான வேலைகளை செய்ய வல்லது. ராணுவ எறும்புகள், தச்சன் எறும்புகள், இல்லை வெட்டும் எறும்புகள் என பல ஆயிரக்கணக்கான சிற்றினங்கள் உண்டு.

தாவரங்களுக்கும், எறும்புகளுக்குமிடையே பரஸ்பர உறவு உண்டு. சில தாவரங்கள் இனிப்பான திரவங்களை சுரக்க வல்லது. அதை அருந்துவதற்கென்றே எறும்புகள் அத்தாவரம் சார்ந்திருக்கும். தனக்கு உணவு கொடுக்கும் தாவரங்கள் வளர்வதற்கு ஏதுவாக அருகில் வளரும் பிற தாவரங்களை முளையிலேயே வெட்டி எரிந்து வளர விடாமல் செய்துவிடும். அதேபோல சில பூச்சியினங்களுடன் சுமுக உறவைக்கொண்டிருக்கும். மாடு (cow bug) என பரவலாக அழைக்கப்படும் பூச்சிகளுடன் எரும்புகளுக்கான தொடர்பும் அவ்வாறே. மாடுகள் தாவங்களை உண்டு இனிப்பான திரவத்தை சுரக்கும். அவற்றை எறும்புகள் உண்ணும். மாறாக எதிரிகளிடமிருந்து மாடுகளை காப்பாற்றும். எறும்புகள் அநேகமாக எல்லா கரிமங்களையும் உண்ண வல்லது. இலைகள், பூஞ்சைகள், சிலந்திகள், புழுக்கள், அனைத்து வகையான பூச்சிகள், ஏன் மற்ற இனத்தை சார்ந்த எறும்புகள் என ஒன்றையும் விட்டு வைப்பதில்லை.

இனி வரும் தலைப்புகள்

பட்டாம் பூச்சி

தட்டான்

மூட்டைப்பூச்சி

எறும்பு

பிள்ளைப்பூச்சி

வெட்டுக்கிளி

விட்டி

விட்டில் பூச்சி

மின்மினிப்பூச்சி

பொன் வண்டு

சில் வண்டு

பேன்

அந்துப்பூச்சி

புத்தகப்புழு

கொசு

தேனீ

குழவி

கரையான்

தெள்ளுப்பூச்சி

கரப்பான் பூச்சி

ரத்தப்புழு

மண்பூச்சி

பழப்பூச்சி

காண்டாமிருக வண்டு